சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இறுதி கலந்தாய்வு வியாழக்கிழமை (ஆக.17) நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர்(பொ) ரா. ஜெயா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் 2017-18ஆம் ஆண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான இறுதி கலந்தாய்வு ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது எனத் தெரிவித்துள்ளார்.