நெல்லையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் திருநெல்வேலியில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் திருநெல்வேலியில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண்மணி மாவீரன் தலைமை வகித்தார்.
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அ. வியனரசு, ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசினார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் ஆகியோரை, இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் விடுதலை செய்ய வேண்டும். மேலும், தமிழகத்தின் அனைத்துச் சிறைகளிலும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதில், தமிழ மக்கள் ஜனநாயக கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழர் விடுதலைக் களம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் போராட்டக் குழு நிர்வாகிகள், கூட்டமைப்பின் நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com