அங்கன்வாடி பணியாளர்கள் அம்பையில் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி பணியாளர்கள் அம்பாசமுத்திரத்தில் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி பணியாளர்கள் அம்பாசமுத்திரத்தில் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஞானம்மாள் தலைமை வகித்தார். கேத்ரின்  விளக்கிப் பேசினார். தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கச் செயலர் சி. ரத்னவேல் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், "அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; அங்கன்வாடி ஊழியர்களுக்கு இளநில உதவியாளர் ஊதியமும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் ஊதியமும் வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
இதில்,  அம்பாசமுத்திரம் வட்டார அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். துர்காதேவி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com