திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழர் விடுதலை களம் அமைப்பினர் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
போராட்டத்திற்கு மாவட்டச் செயலர் முத்துக்குமார் தலைமை வகித்தார். மாநகரச் செயலர் மணிபாண்டியன் முன்னிலை வகித்தார்.
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட 39ஆவது வார்டு லட்சுமிபுரத்தில் டெங்குவால் உயிரிழந்த சுதா என்பவரின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், சேரன்மகாதேவி வட்டம், தெற்கு அரியநாயகியபுரத்தில் வாழைகளை வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.