தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் வெள்ளிக்கிழமை (டிச. 8) முதல் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் திருநெல்வேலி மண்டல துணை இயக்குநர் (பொ) ம. தேவவரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (என்எம்எம்எஸ்) இம்மாதம் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் பள்ளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள USER ID, PASSWORD பயன்படுத்தி சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் அல்லது தலைமையாசிரியர் ஆகியோர் WWW.DGE.TN.GOV என்ற இணையதளம் மூலமாக வெள்ளிக்கிழமை (டிச. 8) முதல் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.