பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி) பருவத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
கல்லூரியில் நடைபெற்ற தேர்வு முடிவு வெளியீட்டுக் குழுக் கூட்டத்துக்கு முதல்வர் மு. முஹம்மதுசாதிக் தலைமை வகித்தார். கல்லூரித் தாளாளர் த.இ.செ. பத்ஹூர் ரப்பானி, பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் எம். எட்வின்ஞானதாஸ், கல்லூரி தேர்வாணையர் கே. சுப்பிரமணியன், உதவி தேர்வாணையர் எஸ்.ஹெச். முஹம்மதுஅமீன், அரசு உதவிபெறா பாடப்பிரிவு இயக்குநர் ஏ. அப்துல்காதர், துறைத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
நவம்பர்-2017 பருவத் தேர்வு முடிவுகளை வெளியிட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தேர்வு முடிவுகளை மாணவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் கல்லூரியின் www.sadakath.ac.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்ய இம்மாதம் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வாணையர் தெரிவித்துள்ளார்.