17, 18ஆவது வார்டுகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட 17, 18ஆவது வார்டுகளில் புதன்கிழமை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என, பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையர் ந. வசந்தராஜன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் கூறியது: திருநெல்வேலி மாநகராட்சியின் பாளையங்கோட்டை மண்டலத்துக்குள்பட்ட 17, 18ஆவது வார்டு பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யும் திருமலைக்கொழுந்துபுரம் நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. கேடிசிநகர் மங்கம்மாள் சாலைக்கு அருகே பம்பிங் குழாயில் இந்தப் பணிகள் நடைபெறவுள்ளதால் மாநகராட்சியின் 17, 18ஆவது வார்டுகளில் சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்.
17ஆவது வார்டுக்குள்பட்ட கேடிசி நகர், காமாட்சி நகர், வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள், வ.உ.சி. நகர் பகுதிகள் மற்றும் 18ஆவது வார்டுக்குள்பட்ட வி.எம். சத்திரம், ஆரோக்கியநாதபுரம் பகுதிகளுக்கு ஜூலை 19ஆம் தேதி (புதன்கிழமை) குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.