மானூர் அருகே இளைஞர் புதன்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மேலும், இருவர் பலத்த காயமடைந்தனர்.
மானூர் அருகேயுள்ள மதவக்குறிச்சியில் உள்ள உச்சினிமாகாளியம்மன் கோயில் கொடை விழா அண்மையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊர் கூட்டத்தில் வரவு-செல்வு வாசிக்கப்பட்ட போது, கார்த்திக்-செல்லப்பா ஆகியோர் தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக மானூர் காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் புதன்கிழமை இருதரப்பினரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது மதவக்குறிச்சியைச் சேர்ந்த மாயாண்டி மகன் வேம்பு (17), அவரது சகோதரர் வேல்முருகன் (15), மாரியப்பன் மனைவி ஆறுமுகம் (20) ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டனராம். பலத்த காயமடைந்த வாய்ப்பேச முடியாத மாற்றுத்திறனாளியான வேம்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் மானூர் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.