வள்ளியூரில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

பணகுடிகாவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரை கண்டித்து வள்ளியூரில் வழக்குரைஞர்கள் புதன்கிழமை ஆர்பாட்டம்  செய்தனர்.

பணகுடிகாவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரை கண்டித்து வள்ளியூரில் வழக்குரைஞர்கள் புதன்கிழமை ஆர்பாட்டம்  செய்தனர்.
  பணகுடி காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் வழக்குரைஞர்களிடம் தரக்குறைவாக நடந்ததாக குற்றம் சாட்டி வள்ளியூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த  ஆர்பாட்டத்துக்கு  வள்ளியூர் சார்பு நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் முத்துகேசவன் தலைமை தாங்கினார்.  உரிமையியல்  வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் சந்திரசேகரன், குற்றவியல் வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் கார்த்தீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகர்கோவில் வழக்குரைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த மகேஷ்,  மரிய ஸ்டீபன், நான்குனேரி வழக்குரைஞர்கள் பாலசந்தர், பச்சிமுத்து, முருகன், முத்தையா  உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com