குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டார்.

குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டார்.
பாளை. அருகேயுள்ள பாறைகுளம் தெற்குத் தெருவைச் சேர்ந்த சுடலை மகன் நம்பி (34). இவர் மீது பெருமாள்புரம், முறப்பநாடு உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாம்.  இவரை, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல் துணை ஆணையர் பிரதீப்குமார் பரிந்துரைத்தார். இதையடுத்து மாநகர காவல் ஆணையர் (பொ) ஆனந்த்குமார் சோமானி உத்தரவின்பேரில் பாளை. மத்திய சிறையில் நம்பி திங்கள்கிழமை அடைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com