நெல்லையில் 22இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 22) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 22) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
எரிவாயு உருளை விநியோகத்தில் காணப்படும் முறைகேடுகள், நுகர்வோரின் குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களின் மெத்தனப் போக்கு உள்ளிட்ட குறைகள் தொடர்பாக புகார் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை வகிக்கிறார். மாவட்டத்தில் உள்ள அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எரிவாயு ஒருங்கிணைப்பாளர் பங்கேற்கின்றனர்.
இதில், எரிவாயு நுகர்வோர் பங்கேற்று தங்களது மனுவாக அளித்து தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com