"பத்ம விருதுக்கு விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்'

மத்திய அரசின் பத்ம விருது பெற தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்கள் இம்மாதம் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பத்ம விருது பெற தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்கள் இம்மாதம் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் கூறியது:
கல்வி, கலை, வணிகம், தொழில், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூகநலன், பொதுநலத்துறை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் சிறந்து விளங்குவோருக்கு பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவரால் இருந்த விருதுகள் வழங்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் விளையாட்டில் சாதனை படைத்தவர்கள் இந்த விருது பெற  விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ‌w‌w‌w.‌pa‌d‌m​a​aw​a‌r‌d‌s.‌g‌o‌v.‌i‌n​  என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பின்னர், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 3 நகல்களுடன், பாளையங்கோட்டையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருநெல்வேலி மாவட்ட பிரிவு அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வெள்ளிக்கிழமை (ஜூன் 23) மாலை 5 மணிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0462-2572632 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறையில், தேர்வு செய்துள்ள பத்ம விருதை குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் ஆட்சியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com