திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் பேட்டையில் இப்தார் விருந்து நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திமுக மத்திய மாவட்டச் செயலர் மு.அப்துல்வஹாப் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டச் செயலர் இரா.ஆவுடையப்பன், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் கே.சங்கரபாண்டியன், எஸ்டிபிஐ கட்சியின் முபாரக், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மில்லத் இஸ்மாயில், உஸ்மான்கான், முன்னாள் எம்.எல்.ஏ. கோதர்மைதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.