மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கோவை குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் சீதாராம் யெச்சூரி மீதான தாக்குல் சம்பவத்தைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் திருநெல்வேலியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் சீதாராம் யெச்சூரி மீதான தாக்குல் சம்பவத்தைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் திருநெல்வேலியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின் திருநெல்வேலி வட்டக் குழு சார்பில், திருநெல்வேலி நகரம் வாகையடி முனை சந்திப்புப் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டக் குழு உறுப்பினர் எஸ்.கே. செந்தில் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கே.ஜி. பாஸ்கரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்.
வட்டச் செயலர் சுடலை ராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் ஸ்ரீராம், வட்டக் குழு உறுப்பினர்கள் ஈஸ்வரமூர்த்தி, ராஜ், சங்கர வேலாயுதம் ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் லர் கலந்துகொண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் கும்பலை கைது செய்ய வேண்டும் எனவும், மத்திய அரசின் மதவெறிக் கொள்கைகளைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com