கருங்கல்லில் மணல் கடத்தல்: 2 பேர் கைது; லாரி பறிமுதல்

கருங்கல் பகுதியில் மணல் கடத்தியதாக 2 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து,   லாரியை  பறிமுதல் செய்தனர்.

கருங்கல் பகுதியில் மணல் கடத்தியதாக 2 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து,   லாரியை  பறிமுதல் செய்தனர்.
கருங்கல் -  தேங்காய்ப்பட்டினம் சாலையில் மணல் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் போலீஸார் வாகனச் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில்,  உரிய ஆவணமின்றி ஆற்றில் மணல் அள்ளிவந்தது தெரியவந்தது.உடனே லாரியை பறிமுதல் செய்த போலீஸார்,  லாரி ஓட்டுநர் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த முருகன்(28),கிளீனர் தேவராஜ்(58) ஆகியோரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com