புதுக்கடை அருகே மது விற்பனை: இளைஞர் கைது

புதுக்கடை அருகேயுள்ள விழுந்தயம்பலம் பகுதியில் மது விற்றதாக இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

புதுக்கடை அருகேயுள்ள விழுந்தயம்பலம் பகுதியில் மது விற்றதாக இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
விழுந்தயம்பலம் பாலக்கவிளை பகுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக புதுக்கடை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் சாலமன் தலைமையிலான போலீஸார் பாலக்காவிளை பகுதியில் சோதனை மேற்கொண்டார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அஜின்(27) மது விற்பனை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார்,  10 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com