மாநில கலைப் போட்டிகளில் சுந்தரனார் பல்கலை. சிறப்பிடம்

காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கலைப் போட்டிகளில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார்

காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கலைப் போட்டிகளில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர், மாணவிகள் சிறப்பிடம் பிடித்தனர்.
போட்டிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்துவகைப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில், சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்களும் பங்கேற்று சிறப்பிடம் பிடித்தனர்.
தனிநபர் பாடல், இசைக்கருவி வாசித்தல் போட்டியில் விலங்கியல் துறை மாணவர் ஷியாம் சுந்தர் முதலிடமும், குறும்படம் போட்டியில் தொடர்பியல் துறை மாணவர் ஆனந்தபாபு 3ஆம் இடமும், குழுப்பாடல், கிராமியக் கச்சேரி போட்டியில் இயற்பியல், விலங்கியல் துறை மாணவர்கள் 3ஆம் இடமும் பிடித்தனர்.
அவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் சனிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. துணைவேந்தர் கி. பாஸ்கர், பதிவாளர் அ. ஜான் டி பிரிட்டோ, இளைஞர் நலத்துறை இயக்குநர் வெளியப்பன், மாணவர் தலைவர் வனேஷ் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com