15 வட்டங்களில் நாளை அம்மா திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 15 வட்டங்களில் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 15 வட்டங்களில் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.
இதுதொடர்பாக, ஆட்சியர் மு. கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் உள்ள 15 வட்டங்களிலும் தலா ஒரு கிராமம் வீதம் தேர்வு செய்யப்பட்டு வாரந்தோறும் அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றன. 4ஆவது கட்ட முகாம்கள் மார்ச் 17இல் தொடங்கி நடைபெறுகின்றன.
இதன்படி, திருநெல்வேலி வட்டத்தில் புதூர், உகந்தான்பட்டி,  ராதாபுரம் வட்டத்தில் இருக்கன்துறை பகுதி - 1, 2, அம்பாசமுத்திரம் வட்டத்தில் சிவசைலம், நான்குனேரி வட்டத்தில் அரியக்குளம், சேரன்மகாதேவி வட்டத்தில் முக்கூடல், பாளையங்கோட்டையில் விளாகம், மானூர் வட்டத்தில் சித்தார் சத்திரம், சங்கரன்கோவிலில் கீழநல்லிதநல்லூர்,  திருவேங்கடத்தில் கே.ஆலங்குளம், தென்காசி வட்டத்தில் புலியூர், செங்கோட்டை வட்டத்தில் மேக்கரை, வீரகேரளம்புதூர் வட்டத்தில் வடக்குகாவலாக்குறிச்சி, ஆலங்குளம் வட்டத்தில் நெட்டூர், சிவகிரி வட்டத்தில் அரியூர், கடையநல்லூர் வட்டத்தில் இடைகால் ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.
இவற்றில், அந்தந்தப் பகுதி மக்கள் கலந்துகொண்டு இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு, இறப்பு, இருப்பிடச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சாலை, குடிநீர் வசதி கோரி மனு அளிக்கலாம். தகுதியான மனுக்களுக்கு முகாமிலேயே தீர்வு காணப்படும் என்றார் ஆட்சியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com