25 இல் தளகடப் போட்டி: மேலப்பாளையத்தில் ஆலோசனைக் கூட்டம்

தடகளம், கூடைபந்து, நீச்சல் போட்டிகள் நடத்துவது குறித்து மேலப்பாளையத்தில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தடகளம், கூடைபந்து, நீச்சல் போட்டிகள் நடத்துவது குறித்து மேலப்பாளையத்தில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தடகளம், கூடைபந்து, கால்பந்து, வாலிபால், நீச்சல் போட்டிகள் இம்மாதம் 25 ஆம் தேதி நடைபெறுகிறது.
இப்போட்டிகளின் முன்னேற்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் க. சேவியர்ஜோதிசற்குணம் தலைமை வகித்தார். இதில், டாக்டர் பிரேமசந்திரன், அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரித் தாளாளர் எஸ்.கே. செய்யதுஅகம்மது, முஸ்லிம் மேல்நிலைப் பள்ளித் தலைவர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன், மேலப்பாளையம் விளையாட்டு அகதெமி பொறுப்பாளர்கள் அமானுல்லா, ஷாகுல்ஹமீது, பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஹமீதுமஸ்தான், பயிற்சியாளர்கள் வெங்கடேஷ், அமலராஜன், சத்யகுமார், பழனிவிக்னேஷ், கர்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 25) காலை 8.30 மணிக்கு மேலப்பாளையம் விளையாட்டு மைதானத்தில் ஆஜராக வேண்டும். நீச்சல் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்திலுள்ள நீச்சல் குளத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com