நெல்லை அருகே பேருந்து மோதி இளைஞர் சாவு

தச்சநல்லூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் புதன்கிழமை இறந்தார்.

தச்சநல்லூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் புதன்கிழமை இறந்தார்.
பாளையங்கோட்டை நேசநாயனார் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் ராஜசேகர் (30). இவர் திருநெல்வேலி சிந்துபூந்துறையில் மருத்துவ  பரி சோதனை மையம் நடத்தி வந்தார். மோட்டார் சைக்கிளில் ராஜேசகர் தச்சநல்லூருக்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த ராஜசேகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com