பேட்டையில் விழிப்புணர்வுப் பேரணி

திருநெல்வேலி அருகேயுள்ள பேட்டையில் தண்ணீர் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அருகேயுள்ள பேட்டையில் தண்ணீர் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
 பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியின் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) மாணவர்-மாணவிகள் சார்பில் உலக தண்ணீர் தினத்தையொட்டி விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியைக் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். என்.சி.சி. அலுவலர் கேப்டன் குமரேசன் தலைமையில் மாணவர்-மாணவிகள் பேரணியாகச் சென்றனர். தண்ணீர்ச்சிக்கனம், மரம்வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு முழக்கங்களை மாணவர்கள் எழுப்பினர். கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி காவல்நிலைய சாலை, வீரபாகுநகர், தொழிற்பயிற்சிக் கல்லூரி வழியாக மீண்டும் கல்லூரியை அடைந்தது. சுபேதார் முருகன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com