மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: தலைமை ஆசிரியர் கைது

ராதாபுரம் அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளித் தலைமை ஆசிரியரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

ராதாபுரம் அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளித் தலைமை ஆசிரியரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடியைச் சேர்ந்தவர் நம்பிராஜன்(49).  இவர், ராதாபுரம் அருகே உள்ள சிங்காரத்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்போது அவர் பள்ளியில் படித்து வரும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை செய்து வந்தாராம்.  இது தொடர்பாக மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர்.  இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர், திசையன்விளை அருகே உள்ள காரமடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
மேலும் இதுதொடர்பாக திருநெல்வேலி சமூகப் பணியாளர் ஜான்சிராணி வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் அங்கயற்கன்னி வழக்குப் பதிவு செய்து தலைமை ஆசிரியர் நம்பிராஜனை செவ்வாய்க்கிழமை கைது செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com