மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை (மார்ச் 23) தொடங்குகிறது.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை (மார்ச் 23) தொடங்குகிறது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை (மார்ச் 23) தொடங்குகிறது. தினமும் மாலை 6 முதல் இரவு 8 மணி வரை பயிற்சி நடைபெறும். ஆங்கிலம், கணிதம், தமிழ் உள்ளிட்ட பாடங்களுக்கு தகுதியானவர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப் பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பப் படிவ நகல், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com