கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கான ஆன்-லைன் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருநெல்வேலி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் வி.பி.சந்திரசேகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் கிராமிய அஞ்சல் பணியிடங்களுக்கு ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்க இம் மாதம் 24 ஆம்தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 5 ஆம் தேதி வரை தேர்வு எழுத விரும்புவோர் விண்ணபித்துக் கொள்ளலாம். இதுகுறித்த விவரங்களுக்கு 0462 2568060 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.