திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை (மே 27) தொடங்குகிறது.
திருநெல்வேலி குறுக்குத்துறையில் தாமிரவருணி நதியின் கரையோரம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறும். அதன்படி நிகழாண்டுக்கான விழா சனிக்கிழமை (மே 27) தொடங்குகிறது.
அன்று முதல் தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற உள்ளன. விழாவின் சிகர நிகழ்வாக ஜூன் 7ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. அன்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மூலவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.