"ரமலான் நோன்பு நாளை தொடக்கம்': மத்திய ஹிலால் கமிட்டி அறிவிப்பு

திருநெல்வேலியில் நடைபெற்ற மத்திய ஹிலால் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில், வெள்ளிக்கிழமை மாலை எந்த பகுதியிலும் பிறை

திருநெல்வேலியில் நடைபெற்ற மத்திய ஹிலால் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில், வெள்ளிக்கிழமை மாலை எந்த பகுதியிலும் பிறை தென்படாததால் ஞாயிற்றுக்கிழமை (மே 28) ரமலான் நோன்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்றான நோன்பு, ரமலான் பிறை பார்த்து கடைப்பிடிப்பது வழக்கம். வெள்ளிக்கிழமை ஷாபான் பிறை 29 ஆக இருப்பதால் பிறை தென்பட்டால் சனிக்கிழமை முதல் நோன்பு கடைப்பிடிக்க வேண்டும்.  அதன்படி, ரமலான் பிறை தொடர்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மத்திய ஹிலால் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு சந்திப்பு ஜூம்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மாவட்ட ஜமாத்துல் உலமா சபைத் தலைவர் டி.ஜெ.எம். ஸலாஹூத்தீன் ரியாஜி தலைமை வகித்தார். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட அரசு ஹாஜி எம். முஹம்மது கஸ்ஸாலி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், சந்திப்பு பள்ளிவாசல் ஜமாத் செயலர் வருசைமுகைதீன், ஹிலால் கமிட்டி நிர்வாகிகள் காதர்மஸ்தான், நசீர்அஹம்மது, முஹம்மதுஇபுராஹீம், அப்துல் ரஹீம், திருநெல்வேலி நகரம் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சாகுல்ஹமீது, பாளையங்கோட்டை ஜாமியா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் செய்யது இப்ராஹீம், மௌலவி ஜமால் முஹம்மது, முஹம்மது அலி, அஸிஸுல்லா, பஷீர் அஹம்மது, மைதீன்பாட்சா, பள்ளிவாசல் இமாம் அப்துல்கனி, உலமாக்கள், ஜமாத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் ரமலான் பிறை தென்படாததால் ஞாயிற்றுக்கிழமை (மே 28) முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சனிக்கிழமை இரவில் இருந்து த்ராவிஹ் தொழுகை நடத்த வேண்டும் எனவும் ஜமாத்துல் உலமா சபை, ஹிலால் கமிட்டி முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com