டெங்கு காய்ச்சல் பாதிப்பு: பெண் சாவு; 4 பேருக்கு சிகிச்சை

கடையம் அருகே வீராசமுத்திரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் வியாழக்கிழமை உயிரிழந்தார். மேலும், முதலிலியார்பட்டி பகுதியில் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடையம் அருகே வீராசமுத்திரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் வியாழக்கிழமை உயிரிழந்தார். மேலும், முதலிலியார்பட்டி பகுதியில் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடையம் அருகே வீராசமுத்திரம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் செய்யது சுலைமான் மனைவி சபினா பேகம் (27). சபினா பேகத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதாம். இதையடுத்து, கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, திருமலையப்பபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சபினாபேகம் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
மேலும், முதலியார்பட்டி பள்ளிவாசல் வடக்குத் தெருவைச் சேர்ந்த காதர் மைதீன் மகன் நிஜாம் (35), காந்தி நகர் 6ஆவது தெருவைச் சேர்ந்த சங்கர் மகள் ருத்ரா (18), அம்மன்கோவில் கிழக்குத் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகள் பிரியா (17) ஆகியோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயில்வே கேட் தெருவைச் சேர்ந்த காஜாமைதீன் (42) டெங்குவால் பாதிக்கபட்டு நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com