ரெட்டியார்பட்டி அருகேயுள்ள இட்டேரியில் மதுபாட்டில்களைத் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
இட்டேரியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்குள்ள பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை இரவு கடையைப் பூட்டி விட்டு சென்றனராம். புதன்கிழமை காலையில் சென்று பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டதோடு, அங்கிருந்த சுமார் ரூ. 11 ஆயிரம் மதிப்பிலான விலைஉயர்ந்த மதுபாட்டில்களை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்ததாம். இதுகுறித்து கடையின் கண்காணிப்பாளர் வெங்கடாசலம் அளித்த புகாரின்பேரில் முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.