தூத்துக்குடியில் நிகழ்ந்த கொலை வழக்கு தொடர்பாக இளைஞர் திருநெல்வேலி நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார்.
தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்தவர் அந்தோனிராஜ் (37). கார் ஓட்டுநரான இவர், கடந்த மாதம் கால்டுவெல் காலனி பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இவ் வழக்கு தொடர்பாக தூத்துக்குடி சிதம்பரநகரைச் சேர்ந்த மாணிக்கம் மகன் முத்துராஜ் (35) திருநெல்வேலி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார். மனுவை விசாரித்த நீதிபதி ராம்தாஸ், இம் மாதம் 27 ஆம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், அதுவரை நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவிட்டார்.