திருநெல்வேலி மாவட்டம், பழவூர் அருகே கல் குவாரியில் பாறைக் கற்கள் சரிந்துவிழுந்ததில் 2 தொழிலாளிகள் இறந்தனர்; 3 பேர் காயமடைந்தனர்.
பழவூர் அருகேயுள்ள ஆவரைக்குளத்தைச் சேர்ந்தவர் தினேஷ். இவருக்குச் சொந்தமான கல்குவாரியில் ராதாபுரம் அருகே சிங்காரத்தோப்பைச் சேர்ந்த சுரேஷ் (42), தங்கராஜா (50), காவல்கிணறைச் சேர்ந்த இசக்கியப்பன், அந்தோணி (45), சேலம் கருப்பன்குளத்தைச் சேர்ந்த செல்வம் (30) உள்ளிட்ட சிலர் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை சுரேஷும், தங்கராஜாவும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது பாறைக் கற்கள் சரிந்து விழுந்தனவாம். இதில் சுரேஷும், தங்கராஜாவும் பாறைக் கற்களுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இசக்கியப்பன், செல்வம், அந்தோணி ஆகிய மூவரும் காயமடைந்தனர். அவர்கள் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.