பாளையங்கோட்டையில் மாட்டை திருடி விற்க முயன்ற மூவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
பாளையங்கோட்டை தியாகராஜநகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் அரவிந்த் (25). அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற இவருக்கு சொந்தமான பசு மாடு ஒன்று வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் மாடு கிடைக்கவில்லை. இதனிடையே செவ்வாய்க்கிழமை இரவு இருவர் இந்த மாட்டை சுமை ஆட்டோவில் ஏற்றி சென்று மேலப்பாளையத்தில் வியாபாரியிடம் விற்பனை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. தகவலறிந்த அரவிந்த், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். மேலப்பாளையம் போலீஸார் விரைந்து வந்து மாட்டை திருடி விற்பதற்காக கொண்டு சென்ற பாளையங்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த பட்டன் (67), துரைபாண்டி (40) மற்றும் மாடு வியாபாரி மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகைதீன் காஜா (35) ஆகியோரை கைது செய்தனர்.