திருநெல்வேலியிலிலிருந்து பொட்டல்புதூருக்குச் சென்ற பேருந்தில் பயணம் செய்த பெண் வைத்திருந்த 23 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணம் மாயமானது.
அம்பாசமுத்திரம், வீரமாணிக்கப்புரத்தைச் சேர்ந்த ராமகுரு மனைவி உமையபதி (62). இவர் திங்கள்கிழமை திருநெல்வேலிலியில் பொருள்கள் வாங்கிவிட்டு கடையம் செல்லும் பேருந்தில் தவறுதலாக ஏறியுள்ளார். அதில், பொட்டல்புதூருக்கு பயணச் சீட்டு வாங்கி பயணம் செய்தாராம்.
பொட்டல்புதூரில் இறங்கும்போது அவரது கைப்பையில் வைத்திருந்த 23.5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணத்தை காணவில்லையாம். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.