கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை நடைபெற்றது.
இக்கோயிலில் சனிக்கிழமை சுவாதி நட்சத்திரத்தையொட்டி மாலை 3 மணி அளவில் 16 வகையான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஷ்ணு ஹோமம், மகாலட்சுமி ஹோமம் தொடர்ந்து 12 வகையான பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு பெருமாள் சப்பரத்தில் தீர்த்தவலம் வருதல், தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினரும், நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினரும் செய்திருந்தனர்.