தூத்துக்குடி அருகே சாலைத் தடுப்பில் பைக் மோதி 2 பாலிடெக்னிக் மாணவர்கள் சாவு

தூத்துக்குடி அருகே சாலைத் தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வெள்ளிக்கிழமை நேரிட்ட விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி அருகே சாலைத் தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வெள்ளிக்கிழமை நேரிட்ட விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி தெற்குராஜாதெருவைச் சேர்ந்த அமல்ராஜ் மகன் டிஜூ (19). லயன்ஸ்டவுன் பகுதியைச் சேர்ந்த கிளைன்டன் மகன் கிளிண்டன் (19). இருவரும், திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு மெக்கானிக்கல் பிரிவு படித்து வந்தனர். டிஜூவின் தந்தை அமல்ராஜ் கப்பலில் வேலைபார்த்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொடுத்திருந்தாராம்.
அந்த மோட்டார் சைக்கிளில் டிஜூவும், கிளிண்டனும் தினமும் கல்லூரிக்கு சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில், கல்லூரி முடிந்ததும் இருவரும் மோட்டார் சைக்கிளில் வெள்ளிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தனராம். வாகைகுளம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி முன்பு அவர்கள் சென்றபோது, மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி சாலையோரத் தடுப்பில் மோதி கவிழ்ந்ததாம்.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவனைக்கு கொண்டுச் செல்ல முயன்றனராம். அதற்குள் டிஜூவும், கிளிண்டனும் அதே இடத்தில் உயிரிழந்தனர். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com