களக்காடு அருகே இரு தரப்பினரிடையே சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் 8 பேர் காயமடைந்தனர்.
களக்காடு அருகே நடுவக்குளம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு கழிவுநீர்த் தொட்டி கட்டுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவரை தாக்கியும், கத்தியால் குத்தினராம்.
இதில் காயமடைந்த 8 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து, அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து களக்காடு போலீஸார் இருதரப்பைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.