நெல்லையில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பொதுவிநியோகத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தி

பொதுவிநியோகத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும், விண்ணப்பம் அளித்த அனைவருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைக்கு அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் தட்டுபாடின்றி வழங்க வேண்டும். மின்னணு குடும்ப அட்டையில் காணப்படும் குளறுபடியை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், சிந்துபூந்துறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் கே. பழனி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாவட்டச் செயலர் பி. கற்பகம் தொடங்கிவைத்தார்.
மாவட்டப் பொருளாளர் வி. சங்கரவடிவு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ். செண்பகம், சீதாலட்சுமி, மேரி, பேச்சியம்மாள், சாவித்திரி, கற்பகவல்லி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com