முதுகலை, சிறப்பு கல்வியியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு இம்மாதம் 19 ஆம் தேதி திருநெல்வேலியில் முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர் கோ. தனமணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை மற்றும் சிறப்பு கல்வியியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (செப்.19) திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலகத்தில் காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
இக்கலந்தாய்வில் பங்கேற்குமாறு 69 முதுகலை ஆசிரியர்களுக்கும், 4 சிறப்பு கல்வியியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
பணிநாடுநர்கள் தங்களது அனைத்து அசல் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிய முதன்மை கல்வி அலுவலகத்தில் 0462 2500702, 0462 2500949 ஆகிய தொலைபேசியிலும், 97897 17461 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.