கடையநல்லூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி, அதிகாலை நடை திறக்கப்பட்டு புருஷசுக்த கும்பஜெபம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. வெள்ளி அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை, கோயில் பரம்பரை அறங்காவலர்கள் செய்தனர்.