திருநெல்வேலியில் ஜவுளிக் கடையில் வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியைச் சேர்ந்தவர் மதியழகன் (47). கூலித் தொழிலாளியான இவர், திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள ஜவுளிக் கடையில் வண்ணம் பூசும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாராம். அப்போது, எதிர்பாராதவிதமாக 200 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக, பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.