நெல்லை பெருமாள் கோயில்களில் கருட சேவை

திருநெல்வேலி, பாளையங்கோட்டையிலுள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி முதலாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, கருடசேவை நடைபெற்றது.

திருநெல்வேலி, பாளையங்கோட்டையிலுள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி முதலாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, கருடசேவை நடைபெற்றது.
திருநெல்வேலி அருகேயுள்ள தென்திருப்பதி என்றழைக்கப்படும் மேலத்திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோயிலில் மூலவருக்கு புஷ்ப அங்கி அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நள்ளிரவில் கருடசேவை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி நகரத்திலுள்ள அருள்மிகு கரியமாணிக்கப் பெருமாள் கோயில், அருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோயில், திருநெல்வேலி சந்திப்பு அருள்மிகு வரதராஜ பெருமாள், சி.என். கிராமத்திலுள்ள அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில், திருப்பதி கோயில், கொக்கிரகுளம் அருள்மிகு நவநீத கிருஷ்ணன் கோயில், பாளையங்கோட்டையிலுள்ள ராஜகோபால சுவாமி கோயில்களில் மூலவருக்கு சிறப்பு வழிபாடு, இரவில் கருட சேவையும் நடைபெற்றது.
இதேபோல், கல்லிடைக்குறிச்சி அருள்மிகு ஆதிவராகபெருமாள் கோயில், வீரவநல்லூர் யாதவர் நவநீதகிருஷ்ணன் கோயில், ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோயில், ஸ்ரீ ரெங்கநாதசுவாமி கோயில், அத்தாளநல்லூர் ஆதிமூலபெருமாள் திருக்கோயில், அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோயில், புருஷோத்தமபெருமாள் கோயில், அரிகேசவநல்லூர், சேரன்மகாதேவி பகுதி பெருமாள் கோயில்களில் கருட சேவை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com