திருநெல்வேலியில் உலக இதய தினத்தையொட்டி விழிப்புணர்வு கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
உலக இதய தினம் செப். 29 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி திருநெல்வேலியிலுள்ள தென்னக இருதய மையத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு இதய நிபுணர் ஆர். ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார்.
கருத்தரங்கில், ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி மேற்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதையொட்டி இதயம் பாதுகாப்பு குறித்த கண்காட்சி நடைபெற்றது. லட்சுமி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் லட்சுமணன், டாக்டர் மீனா ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். இதய மைய மக்கள் தொடர்பு அலுவலர் எல். வேல்முருகன், நிர்வாக அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிர்வாகி கிரிஜா நன்றி கூறினார்.