பாளையங்கோட்டையில் வீட்டு உபயோகப் பொருள்கள் கண்காட்சி நடைபெறுகிறது.
முருகன்குறிச்சி நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்று வரும் இக்கண்காட்சியில் வீட்டுக்குத் தேவையான பொருள்கள், எலக்ட்ரானிக், அழகு சாதனப் பொருள்கள், பர்னிச்சர்கள், தங்க நகைகள், ஆட்டோ மொபைல் வாகனங்கள், பெண்கள், குழந்தைகளுக்கான நவீன ஆயத்த ஆடைகள் இடம்பெற்றுள்ளன.
வண்ண மீன்கள் அரங்கம், விலங்குகள் கண்காட்சி உள்ளிட்ட சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. 2000 பேருக்கு மரக்கன்றுகள், மீன் தொட்டிகள் வழங்கப்படுகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு மெகந்தி, டாடூ இலவசமாக வரையப்படுகிறது. திங்கள்கிழமை (செப். 25) இக்கண்காட்சி நிறைவுபெறுகிறது.