சாலை விபத்தில் இளைஞர் சாவு

திருநெல்வேலி அருகேயுள்ள பேட்டையில் சாலை விபத்தில் காயமடைந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.

திருநெல்வேலி அருகேயுள்ள பேட்டையில் சாலை விபத்தில் காயமடைந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.
பழையபேட்டை சரோஜினி நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகன் டேனியல் (23). இவர், தனது மோட்டார் சைக்கிளில் பேட்டை செக்கடி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த டேனியலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து திருநெல்வேலி மாநகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com