சுத்தமல்லியில் பெண்ணுக்கு  அரிவாள் வெட்டு:  கணவர் கைது

திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் பெண்ணை அரிவாளால் வெட்டியதாக அவரது கணவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் பெண்ணை அரிவாளால் வெட்டியதாக அவரது கணவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சுத்தமல்லி வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (58). தொழிலாளி. இவரது மனைவி வேலம்மாள் (51). இத் தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.  ஆறுமுகம் ஏற்கெனவே ஒரு கொலைவழக்கு தொடர்பாக சிறையில் இருந்துவிட்டு கடந்த 2008 ஆம் ஆண்டில் வெளியே வந்தாராம்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை  இரவு இத்தம்பதிக்குள் ஏற்பட்ட தகராறில்  மனைவியை ஆறுமுகம் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினாராம். 
பலத்த காயமடைந்த வேலம்மாள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சுத்தமல்லி போலீஸார் வழக்குப்பதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com