பாளையங்கோட்டையில் வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஷ்மீரில் சிறுமி ஆசிபாவை பாலியல் வன்முறை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு வழக்குரைஞர் ரமேஷ் தலைமை வகித்தார். வழக்குரைஞர்கள் அப்துல் ஜப்பார், சுதர்சன், பழனி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் முருகேசன், நயினார், கோபால், ராமேஷ்வரன், கந்தசாமி, பொன் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.