திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கொடுமுடியாறு, கடனாநதி, ராமநதி, குண்டாறு, அடவிநயினார், கருப்பாநதி ஆகிய 6 அணைகளும் நிரம்பியதையடுத்து, இந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைகளுக்கு வந்து கொண்டிருந்த உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், அடவிநயினார், குண்டாறு, கருப்பாநதி அணைகளில் இருந்தும் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன.