காவல்நிலையத்தில் செல்லிடப்பேசி திருட்டு: ஆயுதப்படை காவலர் கைது

தாழையூத்து காவல் நிலையத்தில் செல்லிடப்பேசியை திருடியதாக ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டார்.

தாழையூத்து காவல் நிலையத்தில் செல்லிடப்பேசியை திருடியதாக ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டார்.
தாழையூத்து காவல் நிலையத்தில் சில நாள்களுக்கு முன் ஒருவருடைய விலை உயர்ந்த செல்லிடப்பேசி ஒன்று காணாமல் போனது. அதை திருடியது யார் என போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் செல்லிடப்பேசி காணாமல் போனபோது, பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் கோபாலகிருஷ்ணன் (24) மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கோபாலகிருஷ்ணனின் அறையில் போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, காணாமல் போன செல்லிடப்பேசி அவருடைய அறையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து செல்லிடப்பேசியை பறிமுதல் செய்த தாழையூத்து போலீஸார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com