செங்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து ரூ. 70 ஆயிரம் மதிப்பில் நிவாரணப் பொருள்கள்

தென்மேற்கு பருவமழையால் கேரளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செங்கோட்டை அரசு மருத்துவர்கள் சார்பில் ரூ. 70ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

தென்மேற்கு பருவமழையால் கேரளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செங்கோட்டை அரசு மருத்துவர்கள் சார்பில் ரூ. 70ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
கேரளத்தில் வரலாறு காணாத வெள்ளப் பாதிப்பால் பரிதவித்து நிற்கும் மக்களுக்கு, செங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ராஜேஷ் கண்ணன், முருகன், அமுதா, இந்துமதி, செய்யது உசேன், தமிழ்ச்செல்வன், சுரேஷ், செந்தூர் பாண்டியன், அருள் செல்லப்பா, அன்பரசன் ஆகியோர் இணைந்து ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான புதிய ஆடைகள், போர்வை, துண்டு மற்றும் உணவுப் பொருள்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் பாதிப்பு அதிகமுள்ள கேரள மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com