திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வண்ணார்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வண்ணார்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவர் மு.அப்பாவு தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டச் செயலர் இரா.ஆவுடையப்பன் முன்னிலை வகித்தார். ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை, தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்டப் பொருளாளர் ஞானதிரவியம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கருணாநிதி மறைந்த துயரம் தாங்காமல் உயிரிழந்த 10 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதோடு, அவர்களுடைய குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோரின் மறைவுக்கும், கேரளத்தில் மழை வெள்ளத்தில் உயிரிழந்த மக்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 
மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தப்பட்டது. கருணாநிதிக்கு மெரீனாவில் இடம்பெற்றுத் தந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com