மணல் கடத்தல்:லாரி பறிமுதல்; கிளீனர் கைது

மேலப்பாளையம் அருகே மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீஸார், அதன் கிளீனரையும் கைது செய்தனர். 

மேலப்பாளையம் அருகே மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீஸார், அதன் கிளீனரையும் கைது செய்தனர். 
மேலப்பாளையம் ஜின்னா திடல் அருகே லாரியில் இருந்து ஆற்று மணல் இறக்கி கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்ற காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமை யிலான போலீஸார் லாரியில் இருந்து மணல் இறக்க முறையான அனுமதி உள்ளதா என விசாரித்துள்ளனர். அப்போது, அனுமதியின்றி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. 
இதையடுத்து லாரி ஓட்டுநர் உள்பட இருவர் தப்பினர். கிளீனர் சந்திரபிரபுவை போலீஸார் கைது செய்தனர். மேலும் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com